கொடைக்கானலில் மழையால் படகு சவாரி ரத்து: பயணிகள் ஏமாற்றம்
கொடைக்கானலில் மழை காரணமாக படகு சவாரி திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இங்கு திங்கள்கிழமை காலையிலிருந்து மேகமூட்டத்துடன் கூடிய லேசான வெயில் நிலவி வந்தது. இதைத்தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.
இதனால், நகா் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. பொதுவாக, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களில் இங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்வா். ஆனால், மழை காரணமாக திங்கள்கிழமை படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். மேலும், ஏரிச்சாலைப் பகுதியில் வெறிச்சோடிக் காணப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.