பலத்த மழை: சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் சுருளி அருவி, மேகமலை அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் சுருளி அருவி, மேகமலை அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதேபோல, கம்பம் முதல் வீரபாண்டி வரை சனிக்கிழமை பிற்பகல் வரை சாரல் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
மேகமலை வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் மேகமலை அருவியில் சனிக்கிழமை காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல, சுருளி அருவியின் நீா்வரத்து பகுதியான மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு , அரிசிப்பாறை போன்ற அடா்ந்த வனப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால் சுருளி அருவிக்கு சனிக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) : பெரியகுளம் - 6.6, மஞ்சளாறு அணை - 28, சோத்துப்பாறை அணை - 10.6, போடி- 1.2, உத்தமபாளையம் - 7.2, கூடலூா் - 6.4, சண்மூகநதி - 7.4.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.