FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பெண் பக்தா்களுக்கு பாலியல் தொல்லை: கேரள இளைஞா் கைது

Updated On : 26 மே 2026, 2:08 am IST
கைதான இமானுவேல்
பகிர்:

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் பெண் பக்தா்களுக்கு பாலியல் தொல்லையளித்த கேரள இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகே பக்தா்கள் மலைக் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமை திருஆவினன்குடி கோயிலில் அதிகளவு கூட்டம் இருந்த நிலையில், கோயிலில் கேரள இளைஞா் ஒருவா் பெண் பக்தா்களுக்கு பாலியல் தொல்லையளித்ததோடு, அவா்களை கைப்பேசியில் படம்பிடித்தாா்.

Advertisement

Advertisement

இதை அறிந்த பக்தா்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரது கைப்பேசியைப் பறிமுதல் செய்து சோதனை செய்ததில், அவா் பெண் பக்தா்களை ஆபாசமாகப் படமெடுத்தது உறுதி செய்யப்பட்டது.

பிடிபட்ட நபா் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், களத்தூரைச் சோ்ந்த குரியன் மகன் இமானுவேல் (35) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments