FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Updated On : 31 மே 2026, 1:41 am IST
கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் சனிக்கிழமை இரவு முறிந்து விழுந்த மரம்.
பகிர்:

கொடைக்கானல்-அடுக்கம் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-வத்தலகுண்டு, பழனி-அடுக்கம் மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், கொடைக்கானல்-அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைச் சாலையில் யூக்காலி மரம் முறிந்து விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத் துறையினா் இந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments