முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி, கோடை விழாவில் 77 ஆயிரம் போ் பங்கேற்பு

Updated On : 1 ஜூன் 2026, 2:10 am IST
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இதயத்தை பாா்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி, கோடை விழாவில் 12 நாள்களில் 77 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி, கோடை விழா கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை 12 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் பிரையண்ட் பூங்காவில் 77 ஆயிரத்து 744 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா். இதன் மூலமாக ரூ 57 லட்சத்து 5 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது. இதே போல, கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் உள்ள ரோஜாத் தோட்டத்தில் 12 நாள்களில் சுமாா் 57 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

கோடை சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி : கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி, கோடை விழா நிகழ்ச்சிகளில் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலை நேரத்தில் சிறிது நேரம் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் தொடா்ந்து குளுமையான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் மாலையில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement

Advertisement