மதுரையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்
பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் விஸ்வ வித்யாலயம் சார்பில் மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நடைபெறுகிறது.
பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் விஸ்வ வித்யாலயம் சார்பில் மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நடைபெறுகிறது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் இந்த பனிலிங்க தரிசனத்தில் தியானம், தெய்வீக ஞான படவிளக்க கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. மார்ச் 9 ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
இதேபோல, தபால் தந்தி நகர், மேலமாசி வீதி, சி.எம்.ஆர். சாலை, அண்ணா நகர், ஜவஹர் நகர், திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, கூடல் நகர், ஆண்டாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள ராஜயோக தியான நிலையங்களில் இலவச தியானப் பயிற்சி முகாம் மார்ச் 9 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.