FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பற்றி...

உச்ச நீதிமன்றம் - ANI
பகிர்:

தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திருவல்லிக்கேணி காவல்துறை நடத்தி வரும் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தனக்கு ரூ. 35 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தவெக உத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜா குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இந்த வழக்கு தொடர்பாக 14 நபர்களைக் கைது செய்தது.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்ட 14 குற்றவாளிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) ஒப்படைக்கக் கோரிய மனுக்களைப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்ளூர் காவல்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் பிரதிவாதிகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

summary

Horse-trading talk to TVK MLA: Supreme Court refuses to stay High Court order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments