FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட கபடி போட்டி

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளியில் செவ்வாய்க்கிழமை கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட கபடி போட்டிகள் நடைபெற்றன.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:42 am IST
பகிர்:

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளியில் செவ்வாய்க்கிழமை கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட கபடி போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியினை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் தொடக்கி வைத்தார். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகளைச் சேர்ந்த 14, 17, 19 வயதிற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றன. 
மாணவிகளுக்கான போட்டியில் 14 மற்றும் 19 வயது பிரிவில் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 17 வயது பிரிவில் உசிலம்பட்டி டி.இ .எல்.சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றன. மாணவர்களுக்கான போட்டியில் 14 மற்றும் 19 வயது பிரிவில் உத்தப்பநாயக்கனூர் அ.ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியும், 17வயது பிரிவில் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியும் வெற்றி பெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments