அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி
திருமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலியானது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலியானது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி காலனிப் பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா மகன் அழகர் (23). இவர் கப்பலூர் சிட்கோவில் உள்ள போர்வெல் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை பணி முடிந்து இரவு வீடு திரும்பியுள்ளார்.
திண்டுக்கல்-விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அழகர் மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.