காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி நாளை தொடக்கம்
மதுரை காந்தி நினைவு அருங்காட்சிக வளாகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி வெள்ளிக்கிழமை (ஆக.9) முதல் தொடங்குகிறது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சிக வளாகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி வெள்ளிக்கிழமை (ஆக.9) முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து அருங்காட்சியகச் செயலர் மா.பா.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஹிந்திப் பேச்சுப் பயிற்சி நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை முதல் (ஆக.10) தொடங்கும் பயிற்சி வகுப்பிற்கு முன்னதாக சர்வசமய பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பில் சேர கல்வித்தகுதி தேவையில்லை. வயது வரம்பின்றி ஆர்வமுள்ள அனைவரும் வகுப்பில் சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலரை நேரிலோ அல்லது 98657-91420 என்ற செல்லிடப் பேசியிலும் தொடர்புகொண்டு பெயர்களைப் பதிவு செய்யலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.