உசிலம்பட்டியில் மனிதச் சங்கிலி போராட்டம்
உசிலம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் சார்பில், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் சார்பில், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சமூகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், சமநீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வழக்குகளை காலதாமதமில்லாமல் விரைவில் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு மதுரைபுறநகர்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லக்கண்ணு, வி.பி.முருகன், முத்துராணி ஆகியோர் தலைமை வகித்தனர். அரவிந்தன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.