ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு
திருமங்கலத்தில் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் நலச் சங்கம் சார்பாக, வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
திருமங்கலத்தில் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் நலச் சங்கம் சார்பாக, வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
திருமங்கலத்தில் மாநிலப் பொதுச் செயலர் எம். செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஓ.எச்.டி. ஆபரேட்டர், துப்புரவு ஊழியர்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் அறிவித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். முதல் கட்டமாக, ஆகஸ்ட் 27 முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும், ஆகஸ்ட் 29 இல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.