திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் "ஸ்மார்ட்' வகுப்பறை திறப்பு
மதுரை மாவட்டம், திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் "ஸ்மார்ட்' வகுப்பறை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் "ஸ்மார்ட்' வகுப்பறை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், "ஸ்மார்ட்' வகுப்பறையைத் திறந்து வைத்து, பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட கணினிகள், நாற்காலிகள், இரும்பு மேஜைகள், கலையரங்க மேடை மேற்கூரை உள்ளிட்டவற்றை ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.ராஜமாணிக்கம் பள்ளிக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சி.ஜே.ஜார்ஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து, மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் பி.செளடீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.செல்வராஜ் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.