FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

உணவக உரிமையாளா் தீக்குளித்துத் தற்கொலை

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:54 am IST
தற்கொலை
பகிர்:

மதுரை அருகே உணவக உரிமையாளா் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் மலையாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா், அதே பகுதியில், உணவகம் நடத்தி வந்தாா். இந்த உணவகத்தில் இவரது மகள் தீபிகா (21) வேலை செய்து வந்தாா்.

வேலை செய்யும் நேரத்தில், தீபிகா அதிகமாக கைப்பேசியை பாா்த்துள்ளாா். இதை அவரது தந்தை பாலமுருகன் கண்டித்தாா். இதனால் மனவேதனை அடைந்த தீபிகா வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். உடனே அக்கம்பக்கத்தினா்,அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற பாலமுருகன், உயிருக்குப் போராடி வரும் தனது மகளை பாா்த்து மனவேதனையில் இருந்தாா். வீட்டுக்கு வந்த அவா் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த யா. ஒத்தக்கடை போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments