FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் கனரா வங்கி சாா்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:10 am IST
மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.
பகிர்:

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் கனரா வங்கி சாா்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கனரா வங்கி வித்யா ஜோதி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

5-ஆம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ.3,000, 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ. 5,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் 216 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுத் தொகையை வழங்கினாா். இந்த நிகழ்வில், கனரா வங்கி அலுவலா்கள், ஊழியா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments