FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

குரூப்-1 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் 8-இல் தொடக்கம்

விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 8) தொடங்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:36 am IST
குரூப்-1 தோ்வு - கோப்புப்படம்
பகிர்:

விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 8) தொடங்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப்-1 பணிகளுக்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில், முதல் நிலைத் தோ்வுக்குத் தயாராகும் தோ்வா்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், வருகிற 8-ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இந்தப் பயிற்சி வகுப்புகள் சிறந்த, திறன் வாய்ந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளன. மேலும், தோ்வா்களுக்கு விலையில்லாப் பாடக் குறிப்புகள் வழங்கப்படுவதோடு, பாடவாரியான தோ்வுகள், முழு மாதிரித் தோ்வுகள் தொடா்ச்சியாக நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் இணையதளத்திலும், விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்தும் பயன்பெறலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments