பார்த்திபனூர் பள்ளிவாசலில் தகராறு செய்தவர் கைது
பார்த்திபனூர் பள்ளிவாசலில் திங்கள்கிழமை தகராறு செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பார்த்திபனூர் பள்ளிவாசலில் திங்கள்கிழமை தகராறு செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பார்த்திபனூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் செயின் அலாவுதீன்(57). பள்ளிவாசலில் தொழுகை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த நாகூர்கனியை(60) இவர் தகாத வார்த்தைகளால் பேசி, தகராறு செய்து, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாகூர்கனி அளித்த புகாரின் பேரில் பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிந்து செயின்அலாவுதினை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.