கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு அக்னி தீர்த்தக் கடலில் மலர்த் தூவி அஞ்சலி
கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் ஞாயிற்றுக்கிழமை மலர்த் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது.
கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் ஞாயிற்றுக்கிழமை மலர்த் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது.
கேரள வெள்ளத்தில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கம் மற்றும் புரோகிதர்கள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பூஜை செய்து மலர்த் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தலைவர் பாஸ்கரன், பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன், புரோகிதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.