சமரசத் தீர்வு விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரத்தில் வழக்குரைஞர்களுக்கு சமரசத்தீர்வு குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் வழக்குரைஞர்களுக்கு சமரசத்தீர்வு குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இம்முகாமை முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பபணிகள் ஆணையத் தலைவருமான ஏ.கயல்விழி தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில், சமரசம் என்பது கால மாற்றத்துக்கு சமமானது. ஆகவே வழக்குரைஞர்கள் பொதுமக்கள் பிரச்னையை சட்டரீதியாக தீர்க்கும்போது ஊதியத்தை கவனத்தில் கொள்ளாமல் மனிதாபிமானதுடன் செயல்படவேண்டும் என்றார்.
தலைமை நீதித்துறை நடுவர் எம்.சிவப்பிரகாசம், உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.ரத்னதாரா, கவிதா பாலகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர். முகாமில் ஏராளமான வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் நீதிபதியுமான வி.ராமலிங்கம் வரவேற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.