தமிழகத்தில் முன்னோடி மையமாக தேவிப்பட்டினம் சத்துணவுக் கூடம் தேர்வு: ஜெயலலிதாவின் நிதியுதவியில் கட்டப்பட்டது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தாயார் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் ஏற்படுத்திய அன்னை சந்தியா நினைவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தாயார் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் ஏற்படுத்திய அன்னை சந்தியா நினைவு சத்துணவு மையம், மாநில அளவில் முன்னோடி சத்துணவு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தனியார் மழலையர் பள்ளிகளையும் விஞ்சும் வகையில் இங்கு ஸ்மார்ட் போர்டு வகுப்பறை, புரொஜக்டர் கருவி, கல்விக்கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த சத்துணவு மையம் தமிழக அளவில் முன்னோடி சத்துணவு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்டத் திட்ட அலுவலர் பி.கிருஷ்ணவேணி கூறியதாவது: தேவிபட்டினம் அருகே உள்ள சக்கரவாளநல்லூர் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பிறந்த ஊர் என சொல்லப்படுகிறது. எனவே, இங்கு ஜெயலலிதா தனது தாயார் நினைவாக, சொந்த நிதி ரூ.50 ஆயிரத்தை அளித்து, அன்னை சந்தியா நினைவு சத்துணவுக் கூடத்தை 1984-இல் ஏற்படுத்தினார். இம்மையம் தமிழகத்தில் உள்ள 56 ஆயிரம் சத்துணவு மையங்களில், முன்னோடி சத்துணவு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.