பெருநாழி கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்று இடத்தில் அமைக்கக் கோரிக்கை
கமுதி அருகே பெருநாழியில் கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்று இடத்தில் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி அருகே பெருநாழியில் கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்று இடத்தில் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெருநாழியில் 2001 ஆம் ஆண்டில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. கழிவுநீர் வாய்க்கால், பேருந்து நிலையத்தில் குவியும் குப்பைகளுக்கு அருகே இக் கட்டடம் செயல்பட்டு வந்தது.
குப்பைகள், கழிவுநீரின் துர்நாற்றத்தால் கிராம நிர்வாக அலுவலர், தலையாரி உள்ளிட்டோர் தங்கி பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கட்டடமும் சேதமடைந்து, கடந்த 2013-ஆம் ஆண்டில் ரூ.50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மராமத்து செய்யபட்டது. இருப்பினும் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலுள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் செயல்பட்டு வருகிறது.
முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் பொதுமக்கள் பயன்பாடின்றி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாற்று இடத்தை தேர்வு செய்து கிராம நிர்வாக அலுவலகத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.