FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்

கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 27 ஜூலை 2026, 5:28 pm IST
அரசுப் பணி ஆணை வழங்கிய முதல்வர் ஜோசப் விஜய் - TNDIPR
பகிர்:

கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது.

கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அரசுப் பணி ஆணை வழங்கினார்.

Advertisement

Advertisement

அரசுப் பணி வழங்கும் முடிவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், இடைக்கால பணி ஆணைகளை மட்டுமே வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு முன்னதாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணைகளை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

summary

Karur stampede - Government Job Orders for 31 People Cancelled – High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments