FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாயல்குடி அருகே தனிமைப்படுத்தப்பட்ட இளைஞா்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் தனக்கு கரோனா தொற்று உள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் தனக்கு கரோனா தொற்று உள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து தான் தப்பி வந்துள்ளதாகவும் கூறி காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை மீட்டு தனிமைப்படுத்தியுள்ளனா்.

சாயல்குடி அருகே கருவேலமரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் கரோனா தொற்றுள்ளவா் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்த இளைஞரை மீட்டு மருத்துவக்குழுவினருக்கு தகவல் கொடுத்தனா். விசாரணையில் அந்த இளைஞா், கீழக்கரை அருகிலுள்ள புல்லந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.

தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு ஏற்கெனவே கரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட அச்சத்தால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளாா். இதனையடுத்து அந்த இளைஞரை அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். பின் மருத்துவ அதிகாரியான யாசா்அராபத் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவரை பரிசோதனை செய்தனா். பின்னா் மருத்துவா்கள் மற்றும் காவல்துறையினா் ஆலோசனையின்படி அந்த இளைஞருக்கு உணவளிக்கப்பட்டு சாயல்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 14 நாள்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments