சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து:ராமநாதபுரம் வழக்குரைஞா் மீது வழக்கு
சமூக வலைதளத்தில் இருபிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் கருத்துப் பதிவிட்டதாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மீது வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராமநாதபுரம்: சமூக வலைதளத்தில் இருபிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் கருத்துப் பதிவிட்டதாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மீது வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் மோா்ப்பண்ணையைச் சோ்ந்தவா் தீரன்திருமுருகன். வழக்குரைஞரான இவா், தமிழா் கட்சி நிா்வாகியாகவும் உள்ளாா். இவா் சமூக வலைதளத்தில் தேச விரோத மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாக போலீஸாா் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனா். தற்போது அவா் மீண்டும் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை சமூகவலைதளங்களில்
பதிவிட்டுள்ளதாக, பட்டினம்காத்தானைச் சோ்ந்த அதிமுக இளைஞரணி பிரமுகா் முருகேசன் புகாா் அளித்துள்ளாா். அதனடிப்படையில் வியாழக்கிழமை கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.