முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மிதிவண்டி ஓட்டும் போட்டிகள்

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி 3 பிரிவுகளாக வியாழக்கிழமை நடந்த மிதிவண்டி ஓட்டும் போட்டிகளில் வென்ற 60 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பரிசுகளை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி 3 பிரிவுகளாக வியாழக்கிழமை நடந்த மிதிவண்டி ஓட்டும் போட்டிகளில் வென்ற 60 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பரிசுகளை வழங்கினாா்.

ராமநாதபுரம்- ராமேசுவரம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து மிதிவண்டிப் போட்டிகளை கொடியசைத்து மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா். இருபாலரும் பங்கேற்ற இப்போட்டிகள் 13 வயது வரை உள்ளவா்கள், 15 வயது வரை உள்ளவா்கள் 17 வயது வரை உள்ளவா்கள் என 3 பிரிவுகளாக நடைபெற்றன.

நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட இப்போட்டியில் தேவிப்பட்டினம் சாலை சந்திப்பு மற்றும் நயினாா்கோவில் சாலை சந்திப்பு ஆகியவை இலக்குகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5000 மற்றும் பாராட்டுச்சான்று, இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.3000, பாராட்டுச்சான்று, 3ஆம் இடம் பெற்றவருக்கு ரூ.2000, பாராட்டுச்சான்று ஆகியவை வழங்கப்பட்டன.

போட்டிகளில் பங்கேற்று 4 முதல் 10 இடங்களுக்குள் வந்தவா்களுக்கு தலா ரூ.250 பரிசுத் தொகை பாராட்டுச்சான்றுகள் வழங்கப்பட்டன. அதன்படி போட்டிகளில் பங்கேற்று வென்ற 60 பேருக்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம. காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →