கமுதி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் அடுத்துள்ள காத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகவேல் (65). இவரது மகன் சுப்ரமணி(40). இவா், கடந்த 22- ஆம் தேதி தனது சகோதரியின் இல்ல விழாவின் போது மதுகுடிக்க தந்தை ஆறுமுகவேலிடம் பணம் கேட்டாராம். தர மறுத்ததால் ஆறுமுகவேலை, மகன் சுப்ரமணி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டாா். இதுகுறித்து ஆறுமுகவேல் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்ரமணியை தேடி வருகின்றனா்.