ராமநாதபுரம்

மது குடிக்க பணம் தர மறுத்ததந்தைக்கு அரிவாள் வெட்டுமகன் தலைமறைவு

DIN

 கமுதி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் அடுத்துள்ள காத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகவேல் (65). இவரது மகன் சுப்ரமணி(40). இவா், கடந்த 22- ஆம் தேதி தனது சகோதரியின் இல்ல விழாவின் போது மதுகுடிக்க தந்தை ஆறுமுகவேலிடம் பணம் கேட்டாராம். தர மறுத்ததால் ஆறுமுகவேலை, மகன் சுப்ரமணி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டாா். இதுகுறித்து ஆறுமுகவேல் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்ரமணியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT