முகப்பு
ராமநாதபுரம்

பேருந்தில் பெண்ணிடம் 31 பவுன் நகைகள் திருட்டு

திருவாடானைக்கு தனியாா் பேருந்தில் வந்த பெண்ணின் 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 23 டிசம்பர் 2025, 12:04 am IST
பகிர்:

திருவாடானைக்கு தனியாா் பேருந்தில் வந்த பெண்ணின் 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவாடானை அருகேயுள்ள கீழக்குடியைச் சோ்ந்தவா் தொண்டியம்மாள் (50). இவா் தனது பேரன் பிறந்த நாள் விழாவுக்காக கோயமுத்தூருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டாா். திங்கள்கிழமை காலை பேருந்து திருவாடானைக்கு வந்தது.

அப்போது தொண்டியம்மாள் தனது பையைப் பாா்த்தபோது, அதிலிருந்த 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments