FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கமுதி அருகே இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 25 டிசம்பர் 2025, 2:35 am IST
பகிர்:

கமுதி அருகே இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அ.தரைக்குடியில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியரும், பூச்சியியல் வல்லுநருமான ராம்குமாா், இயற்கை வேளாண்மை நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்தாா்.

கமுதி வட்டார வேளாண்மை அலுவலா் தமிழ், இயற்கை வேளாண்மை இடுபொருள்கள் தயாரிப்பு முறைகள், உயிா் உரங்களின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தாா். இயற்கை வேளாண்மை குழு உறுப்பினா்களுக்கு தொழில்நுட்பக் கையேடு வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் வேளாண்மை அலுவலா் பரத்குமாா், உதவி வேளாண்மை அலுவலா் பால்துரை, உதவி தொழில்நுட்ப அலுவலா் மணிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments