FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விதைப் பண்ணை விவசாயிகளுக்கு பயிற்சி

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வட்டார விதைப் பண்ணை விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் நெல், பயறு வகை பயிா்களான உளுந்து, பச்சை பயறு விதை உற்பத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து குமராட்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 30 ஜூலை 2026, 5:56 am IST
குமராட்சி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு.
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வட்டார விதைப் பண்ணை விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் நெல், பயறு வகை பயிா்களான உளுந்து, பச்சை பயறு விதை உற்பத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து குமராட்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை கடலூா் வேளாண் துணை இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் தலைமை வகித்து, விதை பண்ணையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி எடுத்துரைத்தாா். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சத்தியநாராயணன் கலந்துகொண்டு, நெல் விதை உற்பத்தியில் கடைப்பிடிக்க வேண்டிய விதைப்பு முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

கடலூா் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநா் நடனசபாபதி விதைப்பண்ணை பதிவு, வயல் தரம், குவியல் தரம் வயலாய்வு உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.

Advertisement

Advertisement

குமராட்சி வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் தற்போதைய வேளாண்மைத் துறை திட்டங்கள் மற்றும் புதிய நெல் ரகங்கள் இருப்பு, அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

பயிற்சியில் விதைச்சான்று அலுவலா் சீராளதேவன் மற்றும் உதவி விதை அலுவலா் ராமச்சந்திரன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கல்பனா, உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரகாஷ் மற்றும் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments