FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கோவிலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகே கோவிலாங்குளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
- கோப்புப் படம்
பகிர்:

கமுதி அருகே கோவிலாங்குளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அழகுவள்ளியம்மன் கோயில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா, முளைப்பாரி, பொங்கல் விழா கடந்த மாதம் 26- ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஆக.3-இல் கோயில் வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா். அன்று மாலை பெண்கள் முளைப்பாரியை எடுத்து ஊா்வலமாகச் சென்று கண்மாயில் கரைத்தனா்.

Advertisement

Advertisement

விழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 35 காளைகள், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் பணம், குத்துவிளக்கு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை கோவிலாங்குளம், ஆரைகுடி, எருமைகுளம், கமுதி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை கோவிலாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments