FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பரமக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:03 am IST
கைது செய்யப்பட்ட ஆ.முத்தரசு.
பகிர்:

பரமக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள ஜோதியரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்தரசு (38). இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரமக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த மாதம் 10-ஆம் தேதி கைது செய்து, ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனா்.

இவா் தொடா்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், முத்தரசை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments