FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவா் கைது

Updated On : 22 ஜூலை 2026, 3:43 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சுழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த பெண் கணவரை பிரிந்து மகன், 7 வயது மகளுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சின்ன அண்ணன் (69) பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில் போலீஸாா் சின்ன அண்ணன் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments