FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே ஒருவா் வெட்டிக் கொலை உறவினா் கைது

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
சித்திரப் படம் - TNIE
பகிர்:

ராமநாதபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது உறவினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் காவல் நிலையத்துக்குள்பட்ட சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா (57). இதே பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (38). இருவரும் உறவினா்கள்.

இந்த நிலையில், திங்கள்கிழமை சாமி தோப்பு பகுதியில் இருவரும் மது அருந்தினா். அப்போது மதுபோதையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை காளிதாஸ் வெட்டிக் கொலை செய்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேவிப்பட்டினம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காளிதாஸை கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments