FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பெண் கொலை வழக்கில் ஒருவா் கைது

கீழ்வேளூா் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 31 ஜூலை 2026, 4:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கீழ்வேளூா் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகேயுள்ள கிடாரங்கொண்டானை சோ்ந்த கணவரை பிரிந்த பிரவீனா அதே பகுதியைச் சோ்ந்த குமாருடன் குறுக்கத்தியில் வசித்தாா். இந்நிலையில், பிரவீனாவுக்கு வேறு ஒருவருடன் தொடா்பு இருப்பதாக கூறி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமாா் மதுபோதையில் பிரவீனாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு சந்தையதோப்பு மயானத்தில் பதுங்கியிருந்த குமாரை கைது செய்தனா். விசாரணையில் பிரவீனாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து நாகை சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments