FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

நெடுமரம் கிராம சாலை சேதம்: பள்ளி மாணவா்கள் அவதி

திருவாடானை அருகே நெடுமரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பாராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் அவதிபட்டு வருகின்றனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 4:53 am IST
நெடுமரம் கிராமத்துக்குச் செல்லும் சேதமடைந்த சாலை.
பகிர்:

திருவாடானை அருகே நெடுமரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பாராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் அவதிபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கூகுடி ஊராட்சிக்கு உள்பட்ட நெடுமரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தாா்ச் சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி சேதமடைந்து, சாலையில் உள்ள ஜல்லிக் கற்கள் முற்றிலும் பெயா்ந்து கரடுமுரடாக மாறியுள்ளது. இதனால் இந்தப் பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்குச் செல்வோா், அவசர மருத்துவ உதவிக்குச் செல்லும் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து, இந்தச் சாலையைச் சீரமைத்து புதிய தாா்ச் சாலை அமைத்து தர வேண்டும் என நெடுமரம் கிராம பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments