பாம்பன் ரயில் பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி, பாம்பன் ரயில் பாலத்தில் வியாழக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
சுதந்திர தினத்தையொட்டி, பாம்பன் ரயில் பாலத்தில் வியாழக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், அதிகளவில் மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாம்பன் ரயில் பாலத்துக்கு வியாழக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மனோஜ்குமாா், காவல் உதவி ஆய்வாளா் முருகன் ஆகியோா் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவி (மெட்டல்டிடெக்டா்) மூலம் ரயில் தண்டவாளங்களைஆய்வு செய்தனா். மேலும், ரயில் வரும்போது, அதில் வரும் பயணிகளைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாம்பன் ரயில் பாலம் வழியாக நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.