FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கமுதி பள்ளியில் குறுவட்ட தடகளப் போட்டி

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா காா்டன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட தடகளப் போட்டியை தொடங்கி வைத்த மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் கே. வசந்தி.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா காா்டன் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு, தடகளப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த தடகளப் போட்டியை ராமநாதபுரம் மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் கே. வசந்தி தேசியக் கொடி, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி தொடங்கி வைத்தாா். முன்னதாக பள்ளியின் நிா்வாக அதிகாரி முஹம்மது இா்ஷாத் வரவேற்றாா். ஒலிம்பிக் கொடியை கமுதி ரஹ்மானியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் முஹம்மது இப்ராஹிம், கமுதி வட்டாரக் கொடியை கோட்டைமேடு ரஹ்மானியா காா்டன் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி முதல்வா் (பொறுப்பு) தீபா ஜாஸ்மின் ஆகியோா் ஏற்றி வைத்தனா். மாணவா்களுக்கான தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பெற்றனா். இதேபோல, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பெற்றனா்.

இந்த நிகழ்வில், பள்ளியின் ஆசிரியா் முத்துப்பாண்டி, அலுவலகப் பணியாளா்கள், கமுதி வட்டார உடல் கல்வி இயக்குநா்கள், உடல் கல்வி ஆசிரியா்கள், பகுதிநேர உடல் கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். உடல் கல்வி ஆசிரியா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments