FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் சுதந்திர தின விழா

திருவாடானை: வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆண்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 2:30 am IST
திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரேவதி தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். உடன், குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி ஆண்டனி ரிஷாந்தேவ், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சுரேஷ், செயலா் ஜெகன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவாடானை: வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆண்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினாா்.

திருவாடானை காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். திருவாடானை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.

இதே போல, அந்தந்த பள்ளிகள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் அதன் தலைவா்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments