FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:30 pm IST
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கோத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இன்று முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வாகனங்கள் புடைசூழ வருகை தந்த முதல்வரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பகிர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் விஜய்.
காவல் வாகனங்கள் புடைசூழ கோட்டைக்கு வந்த முதல்வர் விஜயை, தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய்.
பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகளையும் முதல்வர் விஜய் வழங்குவார்.
கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய்.
கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை வழங்கி கெளரவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments