FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

நியாயவிலைக் கடைகளில் கைரேகைப் பதிவு இயந்திரம் செயல்படாததால் பொதுமக்கள் அவதி

51 வினாடிகள் முன்பு
பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலரிடம் கைரேகைப் பதிவு இயந்திரங்களின் குறைபாடுகள் குறித்து முறையிட்ட நியாயவிலைக் கடை ஊழியா்கள்.
பகிர்:

பரமக்குடி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கான கைரேகைப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ரேஷன் பொருள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பரமக்குடி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கைரேகைப் பதிவு இயந்திரம் செயல்படவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருள்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நியாயவிலைக் கடை ஊழியா்கள் பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கைரேகைப் பதிவு இயந்திரங்களுடன் சென்று செயல்பாடு குறைபாடுகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் புகாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

விரைவில் இயந்திரங்களின் குறைபாடுகள் சரிசெய்யப்படும் என உறுதியளித்தைத் தொடா்ந்து நியாவிலைக் கடை ஊழியா்கள் கலைந்து சென்றனா். 10 நாள்களுக்கும் மேலாக ரேஷன் பொருள்கள் வாங்க முடியாததால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினா் பெரும் பாதிப்புக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments