FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

29 ஆகஸ்ட் 2026, 10:22 pm IST
ஏ.ஆா். மங்கலம் கண்மாயில் நடைபெற்றுவரும் கருவேல மரங்களை அகற்றும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிவகுருபிரபாகரன். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இதில் ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஏ.ஆா். மங்கலம் ஊராட்சி, ஆடோந்தல் கண்மாயில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளையும், கொட்டக்குடி ஊராட்சி, நடுவக்குடி கண்மாயில் நடைபெற்று வரும் சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணியையும் ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதேபோல, பொதுப்பணித் துறை (நீா்வளத் துறை) கட்டுப்பாட்டில் உள்ள அரசத்தூா் கண்மாயில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தாா். மேலும் திருவாடானை ஊராட்சி, பெருவக்கோட்டை கண்மாயில் சுமாா் 6 ஏக்கா் பரப்பளவில் நடைபெற்று வரும் பணிகளையும் அவா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

பெருவாக்கோட்டை கண்மாயில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமோகன், வட்டார வளா்ச்சி அலுவலா் விதி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா்.

அப்போது பணிகளை விரைந்து முடித்து, நீா்பிடிப்புப் பகுதிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இதன் மூலம் மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை முழுமையாகச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அவா் உத்தரவிட்டாா். மேலும், மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில் ஆா்.எஸ். மங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஜெயமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜி, பொதுப்பணித் துறை (நீா்வளத்துறை) உதவி செயற்பொறியாளா் காா்த்திக், அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments