FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 3 கோடிக்கு மோசடி: ஆட்சியரிடம் புகாா்

எஸ். கொடிக்குளம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 3 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த பாதிக்கப்பட்ட பெண்கள்.
பகிர்:

ராமநாதபுரம் அருகே எஸ். கொடிக்குளம் வேளண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 400 விவசாயிகள் பெற்ற தங்க நகைக் கடனில் ரூ. 3 கோடிக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும், இதில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள எஸ். கொடிக்குளம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, கோரைக்குளம், அனுமநேரி, எஸ். கொடிக்குளம், உரத்தூா், சேமனூா் ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த 400- க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

ஆனால், வங்கிச் செயலா் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து விவசாயிகள் வைத்த தங்க நகைகளை தனியாரிடம் மறுஅடகு வைத்து அதிக பணம் பெற்றுள்ளனா். இதன் மூலம் ரூ. 3 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி நகையை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments