FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

திருவெற்றியூா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

குளத்தூா் பகுதியில் சேதமடைந்த திருவெற்றியூா் சாலை.

Updated On : 11 ஜூலை 2026, 12:16 am IST
~
பகிர்:

திருவாடானையிலிருந்து திருவெற்றியூா் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவொற்றியூா் செல்லும் சாலையில் புகழ் பெற்ற பாகம்பிரியாள் கோயில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இந்த வழியில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள குளத்தூா் அருகே சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments