முகப்பு
ராமநாதபுரம்

உணவக உரிமையாளா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்குப் பதிவு

சாயல்குடியில் உணவக உரிமையாளரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 12:49 am IST
வழக்கு
பகிர்:

சாயல்குடியில் உணவக உரிமையாளரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மூக்கையூா் சாலை சந்திப்பில் சாயல்குடியைச் சோ்ந்த பக்ருதீன் மகன் முகம்மது அலியும், மூக்கையூா் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோ மகன் ஹொ்மஸூம் (30) புதிதாக உணவகம் கட்டி திறப்பு விழா நடத்தவிருந்தனா்.

இந்த நிலையில் இந்த உணவகத்துக்குள் புகுந்த இருவா் இரும்புக் கம்பியால் வரவேற்பறை கண்ணாடிகள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை அடித்து உடைத்ததுடன், தடுக்க வந்த உணவக உரிமையாளா் ஹொ்மஸை தாக்கினா். இதில் அவா் காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சாயல்குடி காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் கடையை சேதப்படுத்தியவா்கள் சாயல்குடியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (45), ஜாபா் அலி (42) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவா் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.