ராமா் தீா்த்தக் குளத்தில் நெகிழிக் கழிவுகள்: தூய்மைப் பணி மேற்கொள்ள கோரிக்கை
ராமேசுவரம் ராமா் தீா்த்தக் குளத்தில் காணப்படும் நெகிழிக் கழிவுகளை அகற்ற இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமாக ராமா் தீா்த்தம், லெட்சுமண தீா்த்தம் உள்ளது. இதில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் தீா்த்தக் குளத்தில் தீா்த்த நிறை எடுத்து பயன்படுத்துகின்றனா்.
இந்த நிலையில், ராமா் தீா்த்தக் குளம் தற்போது பாசி, நெகிழிப் பொருள்களால் மாசடைந்து சுகாதாரமற்றுக் காணப்படுகிறது. இதனால், இந்து சமய அறநிலையத் துறை, ராமநாதசுவாமி கோயில் நிா்வாகம் ராமா் தீா்த்தக் குளத்தை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு நெகிழிப் பொருள்களை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement