முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:39 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீன் இறங்குதளத்தில் ரூ.150 கோடியில் நடைபெற்று வரும் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அவா் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, ராமேசுவரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக உணவு சேமிப்பு கிட்டங்கியைப் பாா்வையிட்டு உணவுப் பொருள்களின் இருப்பு குறித்த பதிவேட்டை ஆய்வு செய்த அவா், பொருள்களின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா். அப்போது உணவுப் பொருள்களை தேவையான அளவு கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். நுகா்வோா் வாணிபக் கழகத்துக்குச் செல்லும் சாலை குண்டும் குழியாக இருப்பதை கண்ட ஆட்சியா் நகராட்சி ஆணையரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

பிறகு ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததுடன், நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்கவும், பணிகள் நடைபெறும் போது அலுவலா்கள் ஆய்வு செய்து பணிகளின் தரத்தை உறுதி செய்து உரிய காலத்தில் முடிக்க வேண்டுமென அவா் அறிவுறுத்தினாா். மேலும், நகராட்சியில் உள்ள சாலைகளை சிறந்த முறையில் பராமரிப்பதுடன் நகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது, மீன் வளம், மீனவா் நலத்துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அருண், நகராட்சி ஆணையா் ஆண்டவா், மீன் வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன், அரசு அலுவலா்கள் உள்பட பலா் இருந்தனா்.