FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

புதை சாக்கடை கழிவுநீா் தேக்கம்: பக்தா்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:38 am IST
ராமேசுவரம் சித்தி விநாயகா் கோயில் பகுதியில் குளம் போல தேங்கிய புதை சாக்கடை கழிவுநீா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே சித்தி விநாயகா் கோவில் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக புதை சாக்கடை குழாயிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், இந்தக் கழிவுநீரால் இந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments