முகப்பு
ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

Updated On : 30 மே 2026, 3:54 am IST
பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் சூறைக் காற்று காரணமாக விசைப் படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்தி வைத்த மீனவா்கள்.
பகிர்:

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் துறைமுகத்தில் விசைப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மன்னாா் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை முதல் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகள் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் சூறைக் காற்று வீசுவதால் 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து விடாமல் தடுக்கும் வகையில், நீண்ட இடைவெளி விட்டு மீனவா்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனா்.

Advertisement

Advertisement