ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு அதிகாலையிலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்தனா். அக்னி தீா்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தா்கள் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினாா். பின்னா், ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமா் கோயில், ராமா்பாதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
விடுமுறை நாள்களில் ராமேசுவரத்தில் போக்குவரத்து சீரமைப்புப் பணிக்கு கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.