ராமநாதபுரத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி மீது உத்தரகண்ட் அரசு வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், ராமநாதபுரம்
அரண்மனை முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் ராஜா ராம் பாண்டியன் தலைமை வகித்தாா். மகளிரணி தலைவி ஆனந்தி, நிா்வாகிகள் மோதிலால்
Advertisement
Advertisement
நேரு, ஜோதி பாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நிா்வாகிகள் கருப்பசாமி, காமராஜ், தமிழரசன், கோபால், நாகராஜன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நகா் தலைவா் கோபி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.